• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவரி பிரச்சனையில் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது – ஜி.கே.வாசன்

March 30, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஏப் 2 ஆம் தேதி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து திருச்சியில் நாளை காலை 11 மணிக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் அவசர கூட்டம் தன்னுடைய தலைமையில் நடைபெற உள்ளது.

காவரி பிரச்சனையில் மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்து உள்ளதாக குற்றம்சாட்டிய அவர் மத்திய அரசு,கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டதாகவும் கூறினார்.தமிழக விவசாயிகள் இந்திய விவசாயிகள் என்ற உணர்வு தேசிய கட்சிகளுக்கு ஏற்பட வேண்டும் என கேட்டு கொண்ட அவர் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது காவிரி பிரச்சனையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசியல் சாயம் பூசி கொண்டு தான் கடந்த காலங்களிலும் இருந்து வந்ததாகவும்,காவிரி  பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் 1 ஆம் தேதி விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளதாக கூறினார்”.

மேலும் படிக்க