• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காற்று மாசுபாட்டை துல்லியமாக கண்டறியும் புதியகருவி அறிமுகம்

September 19, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.எஸ்.சி. மின்னணுவியல்துறை, இன்னவேஷன் செல் ஆகியவை இணைந்து காற்று மாசுபாட்டை மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய கருவியினைக் கண்டுபிடித்துள்ளது.எம்.எஸ்.சி. மின்னணுவியல்துறை மாணவர் டி.பிரசன்னகுமார் இந்த கருவியினை அறிமுகம் செய்ய எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார் பெற்றுக் கொண்டார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமார் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு ஆகியோர் இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.எம்.எஸ்.சி. மின்னணுவியல் துறை மாணவர் டி.பிரசன்ன குமார் கல்லூரியிலுள்ள இன்னவேஷன் செல் மற்றும் சகமாணவர்களுடன் இணைந்து காற்று மாசுபாட்டை மிகத் துல்லியமாக கண்டறியும் இந்த புதியகருவியினைக் கண்டு பிடித்துள்ளார்.

கே.ஒய்.ஏ (Know your Air) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக்கருவி நம்மைச் சுற்றிகாற்று தூய்மையாக உள்ள நிலையில் பச்சை விளக்கைகாட்டும், காற்றில் வேதியல் மாசுபரவும் போது சிவப்பு விளக்கினைக்காட்டி நம்மை விழிப்புணர்வடையச் செய்வதோடு நம்முடைய கைப்பேசிக்கும் செய்தியினை அனுப்பி முன்னெச்சரிக்கை செய்கிறது. சுமார் இருபது சதுரஅடி பரப்பில் ஏற்படும் காற்றுமாசுபாட்டினைக்கண்டறியும் வகையில் இந்தகருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது நவீன தொழில் நுட்பமான பர்சனல்அசிஸ்டன்ட் என்னும் வசதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். இ்ந்தக்கருவியினைக் கொண்டு ஒருவர் இருக்குமிடத்தைச் சுற்றிகாற்றில் கலந்துள்ள நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை மிகத் துல்லியமாக கண்டறிய முடியும். மனிதர்கள்கூடும்பொது இடங்கள், வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இதனைப்பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டின்சமையலறையில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் கூட இக்கருவி அதனைக்காட்டிவிடும்.

மேலும், வீட்டிலோ அலுவலகத்திலோ புகையிலையினை பயன்படுத்தும் போது அதில் உள்ள நிக்கோடின் போன்ற நச்சுபொருட்கள் கலப்பினையும் இது கண்டறிந்துவிடும். சுற்றுச்சூழல் மாசுபாட்டு விழிப்புணர்வில் இந்தகருவி ஒரு புதிய மைல்கல் என்றே கூறலாம்.பொதுவாக மனிதர்கள் உயிர்வாழ ஆக்ஸிஜன் ஆதாரமாக உள்ளது. ஆனால் காற்றில் கார்பன்டை-ஆக்சைடு, வாலடெய்ல் ஆர்கானிக்காம்பௌன்ட் ஆகிய வேதிப்பொருட்கள்கலக்கும் போது சுவாசத்திற்கு தீங்குவிளைவிக்கும். கண்ணுக்குத்தெரியாத இந்த மாசுபாட்டினை கண்டறிய அனைவரும் பயன்படுத்தலாம்.

குறிப்பாக சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் இதனைப்பயன்படுத்தி முன்னெச்சரிக்கையுடன் தங்கள் ஆரோக்கியத்தைக்காத்து கொள்ளலாம்.முற்றிலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உழைப்பில் விளைந்த இந்த கருவியின் அறிமுகவிழாவில் எம்.எஸ்.சி. மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் கே. பூர்ணிமா, இன்னவேஷன் செல்லினுடைய ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் டி. ஹரிபிரசாத் முனைவர் டி. சந்தானம்ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க