• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார் விற்பனை செய்வதாக ரூ.1 லட்சம் மோசடி

October 20, 2021 தண்டோரா குழு

கோவையில் ராணுவ அதிகாரி என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டேவிட் ஜான் (26). டிரைவர். இவர் பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக (ஓ.எல்.எக்ஸ்) இணையதளத்தில் தேடியுள்ளார். அதில், இன்னோவா கார் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கார் மாடல், விலை உள்ளிட்ட விவரங்களை டேவிட் ஜான் கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ராணுவ அதிகாரி என கூறி அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். மேலும் கார் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.99,400 அனுப்பும் படி தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து டேவிட் ஜான் அந்த நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ‘போன் பே’ மூலமாக ரூ.99,400 அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நூதன மோசடியில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க