• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார் விபத்தில் கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உயிரிழப்பு

November 2, 2019 தண்டோரா குழு

கார் விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன் என்பது உயிரிழந்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன், இவர் பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டு இன்று காலை கோவை திரும்பினார், அவர் வந்த கார் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மின்னல் வேகத்தில் மோதியது இதில் காரின் முன்னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கார் ஓட்டுனர் இயேசுதாஸ் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கோவை வந்து கொண்டிருக்கையில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க