• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்த்தி சிதம்பரத்தை ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐக்கு தடை

March 24, 2018 தண்டோரா குழு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐக்கு தடை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார்  கைது செய்தனர்.

ஏற்கெனவே 12 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் டில்லி திஹார் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,ரூ.15 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும்,வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்கிய டெல்லி சிபிஐ நீதிமன்றம்,அவரை ஏப்.16 வரை கைது செய்யவும் சிபிஐக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க