July 15, 2020
தண்டோரா குழு
கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருமான காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு தரப்பினரும் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வரும் சூழலில், கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் கோவை பாபு கூறுகையில்,
“காமராஜரின் நினைவு தினத்தில், கோவையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில் சமூக பணிகளுக்கான இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இன்று காந்திமாநகர் மாநகரில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இந்தாண்டுக்குள் கோவையில் 100 இடங்களில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.” என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமால கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், தங்கராஜ், பயிற்சி பள்ளி ஆசிரியர் கவிதா பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.