• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காமராஜர் பிறந்த நாளில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கிய திராவிடன் அறக்கட்டளை

July 15, 2020 தண்டோரா குழு

கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருமான காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு தரப்பினரும் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வரும் சூழலில், கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் கோவை பாபு கூறுகையில்,

“காமராஜரின் நினைவு தினத்தில், கோவையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில் சமூக பணிகளுக்கான இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டு நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, இன்று காந்திமாநகர் மாநகரில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும். இந்தாண்டுக்குள் கோவையில் 100 இடங்களில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமால கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், தங்கராஜ், பயிற்சி பள்ளி ஆசிரியர் கவிதா பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க