• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காத்மாண்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 14 பேர் பலி

October 28, 2017 தண்டோரா குழு

காத்மாண்டுநகரில் ஓடும் திரிசூல் ஆற்றில், பேருந்து கவிழ்ந்து விழுந்ததில்,14 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து,ராஜ்பிராஜ் நகருக்கு, 50பயணிகளை கொண்ட பேருந்து ஒன்று, இன்று(அக்டோபர் 28) காலை சென்று கொண்டிருந்தது.அந்த பேருந்து, காத்மாண்டு நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்பேசி பஞ்சே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்ததால், அந்து பேருந்து திரிசூல் ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில், அதில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனே, இந்த விபத்து குறித்து அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து,மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்துகாவல்துறை அதிகாரி கூறுகையில், “அந்த பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆற்றில் மூழ்கிய 14 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அதில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல் அடங்கும். நீச்சல் தெரிந்த 15 பேர், நீந்தி கரையை அடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது”என்று கூறினார்.

மேலும் படிக்க