• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதில் உயிருடன் இருந்த பல்லி!

August 21, 2017 தண்டோரா குழு

சீனாவில் காதில் அதிக வலி இருப்பதால், மருத்துவரிடம் சென்றவர் காதிலிருந்து வாலில்லா பல்லியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் கோங்ஷூ நகரை சேர்ந்த ஒருவர், தன்னுடைய காதில் ஏதோ அசைந்துக்கொண்டு இருப்பதை உணர்ந்துள்ளார். அதோடு அவருடைய காதில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவருடைய காதை பரிசோதித்தபோது, அவருடைய காதில் பல்லி ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அதை வெளியே எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து, அந்த நபருடேய காதிலிருந்த பல்லி தலைக்குள் செல்லாமல் இருக்க, அதற்கு மயக்கம் ஏற்படுத்தினர். பிறகு, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ப்லைஎர்ஸ்’ என்னும் கருவி மூலம் அதை வெளியே எடுத்தனர்.

அதை வெளியே எடுத்தபோது, அந்த பல்லிக்கு வால் இல்லாததை பார்த்துனர். ஒருவேளை அவர்கள் அதை வெளியே எடுக்கும்போது, அதன் வால் வெட்டப்பட்டிருக்கலாம் என்று மீண்டும் ஒருமுறை, அவருடைய காதை சரிபார்த்தனர். ஆனால், அந்த வால் அவருடைய காதில் இல்லை. ஒருவேளை
அந்த பல்லி நோயாளியின் காதில் நுழைவதற்கு முன்பதாகவே, ஏதோ ஒரு விதத்தில், அது தன்னுடைய வாலை இழந்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க