• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலுக்கு பணமோ சொத்தோ முக்கியமில்லை என்று நிருபித்த பெண்

August 10, 2017 தண்டோரா குழு

காதலுக்கு பணமோ சொத்தோ முக்கியமில்லை என்று மலேசியா தொழிலதிபர் மகள் தன் வாழ்கையில் நிருபித்துள்ளார்.

மலேசியா நாட்டின் தொழிலதிபர் கேபெங்(78), Malayan United Industries நிறுவனத்தின் உரிமையாளர். . கடந்த 2015ம் ஆண்டு, மலேசியாவின் 50 கோடிஸ்வரர்கள் யார் என்னும் ஆய்வை போர்பஸ் பத்திரிக்கை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் கே பெங் 44வது இடத்தில் இருந்தார். அவருடைய சொத்துக்களின் மதிப்பு மொத்தம் 300 மில்லியன் டாலர் ஆகும்.

கடந்த 2008ம் ஆண்டு, கே பெங்கின் மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ்கோ இங்கிலாந்தில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.அப்போது கரீபியன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெடிடியா பிரான்சியஸ் என்பவரை சந்தித்துள்ளார்.இவர்களுடைய நட்பு, காதலாக மாறி, திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஏஞ்சலின் தனது விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால், அவர்களுடைய திருமணத்திற்கு ஏஞ்சலின் தந்தை சம்மதம் தெரிவிக்கவில்லை.

தனது தந்தை மனம் மாறி திருமணதிற்கு சம்மதம் தருவார் என்று ஏஞ்சலின், சிறிது காலம் பொறுமையோடு இருந்தார். ஆனால், திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கதையடுத்து, தன்னுடைய காதலரை திருமணம் செய்துக்கொண்டார் ஏஞ்சலின்.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது உண்டு. ஆனால், காதலுக்கு சொத்து முக்கியமில்லை என்று அதை உதறி தள்ளிவிட்டு வந்த ஏஞ்சலின்னை சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க