திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பல்லவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஜயபிரபு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அப்போது, விஜயலட்சுமியை முதலில் விஷம் அருந்தி சொல்லியிருகிறார் விஜயபிரபு அவரும் காதலரை நம்பி விஷம் அருந்தியுள்ளார். ஆனால், விஜயபிரபு விஷம் அருந்த மறுத்துவிட்டார்.எனினும், அவர் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மகளை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயபிரபு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்