• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஞ்சி சங்கராச்சாரியார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

February 28, 2018 தண்டோரா குழு

காஞ்சி சங்கராச்சாாியாா் மறைவுக்கு  பிரதமர் மோடி,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவா்கள் இரங்கல் தொிவித்துள்ளனா்.

பிரதமர் மோடி:காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவால் வேதனை அடைந்தேன்.

முதலமைச்சர் பழனிசாமி:ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்; ஜெயேந்திரரை இழந்து வாடும் ஆன்மீக பக்தர்கள், காஞ்சி சங்கர மட நிர்வாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்:காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

மு.க.ஸ்டாலின்:காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் ஜெயேந்திரரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள், சங்கர மட பணியாளர்களுக்கு ஆறுதல்.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி:லட்சக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஜெயேந்திரர்.

பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ்:சீர்த்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்.

ராகுல்காந்தி:தனது கொள்கைகளால் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு முன்னோடியாக விளங்கியவா் சங்கராச்சாாியாா். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.

வானதி சீனிவாசன்:ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்:சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மீகவாதி காஞ்சி ஜெயேந்திரரை பாரதம் இழந்திருக்கிறது.

கீ.வீரமணி:திராவிடா் கழக தலைவா் கீ.வீரமணி ஜெயேந்திரரின் மறைவுக்கு இரங்கல் தொிவித்துள்ளாா்.

ராமதாஸ்:பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு இரங்கல் தொிவித்துள்ளாா்.

மேலும் படிக்க