• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவுண்டம்பாளையம் மேம்பால பணிகளில் தொடரும் மந்த நிலை – மக்கள் கடும் அவதி

March 31, 2021 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி மந்த கதியில் நடந்து வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள தெருக்கள் வழியாக வாகனங்கள் செல்வதால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கிலோ மீட்டர் நீளம், 17.20 கிலோ மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த பால பணிகளால் மேட்டுப் பாளையம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில் கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள், கார்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக மாற்றுப்பாதைகளான வெள்ளக்கிணர் பிரிவு, துடியலூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனிடையே மேம்பாலம் பணிகள் நடைபெறும் அருகில் உள்ள தெருக்கள் வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

‘‘மாற்றுப்பாதைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது காரணமாக தான் கார்கள், இருசக்கர வாகனங்கள் மேம்பாலம் அருகில் உள்ள தெருக்கள் வழியாக செல்கிறது. இதனால் தெருக்களில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடைகளுக்கு நடந்து செல்லக்கூட மக்கள் அச்சமடைகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மிகவும் மந்த கதியில் நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.

மேலும் படிக்க