• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பீல் புதிய எரிவாயு தகன மேடை

February 17, 2021 தண்டோரா குழு

கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பீல் புதிய எரிவாயு தகன மேடை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஷாஜ் கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலையும், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எரிவாயு தகன மேடையையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளர்கள் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆணைகளை நான்கு அலுவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க