June 2, 2017
தண்டோரா குழு
நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று அதிகாலை காலமானார்.
மதுரையில் 1938-ம் ஆண்டு நவம்பா் 9-ம் தேதி பிறந்தவா் அப்துல் ரகுமான்(80). வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூாரியில் பேராசிரியராக பணியாற்றினார். வானம்பாடி இயக்க கவிஞா்களோடு நெருங்கிய தொடர்பு உடையவர் ஆவார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.
அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கியா இவர் ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.