• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம் – டிஜிபி லைலேந்திர பாபு பேச்சு

December 11, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூரில் மாநகர காவல்துறை மற்றும் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்ட மைப்பு சார்பில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரை யாடல் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில் ஜமாத் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசும்போது,

கல்வி தான் ஆயுதம் ஒருவருக்கு ஒருவர் உதவினால் தான் நாம் ஒரு நல்ல சமுதாயமாக இருக்கமுடியும். இளைஞர்களுக்கு கல்வி என்ற போர் ஆயுதத்தை அளிக்க வேண்டும்.
முன்பு எல்லாம் படிக்க அதிக கல்லூரி இல்லை. மிகவும் குறைவான என்ஜினீயரிங் சீட்தான் இருக்கும்.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

தமிழகத்தில் 500 – க்கும் மேற் பட்ட கல்லூரிகள் உள்ளன.ஒரு லட்சம் சீட் காலியாக உள்ளது. கல்வி என்பது ஒரு மிகப்பெரிய ஆயுதம். அதை வைத்து நீங்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் பெரிய நிலையில் உள்ளனர். உங்கள் தாய் , தந்தை உங்களுக்காக படும் கஷ்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்
இது நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் என்றார்.

மேலும் படிக்க