• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது

August 16, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்டக்கலை மன்றம் சார்பில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகளை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பொன்னடை அணிவித்து கௌரவித்தார்.

இது குறித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:

தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், நுண்கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கான கலை வளர்மணி விருது, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலைச்சுடர்மணி விருது, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி விருது, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கலை முதுமணி விருது ஆகிய 5 விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் கிராமிய கலையில் சிறப்புகள் பெற்றமைக்காக நேகாஷ், நிதிஷ் சகோதர்கள், கலை இளமணி விருதுக்கு ஓவியர் விக்னேஷ்ராஜ், கலை வளர்மணி விருதுக்கு பரதநாட்டிய ஆசிரியை விஜயலட்சுமி, கலைச்சுடர்மணி விருதுக்கு கிராமிய தவில் கலைஞர் ஈஸ்வரன், கலை நன்மணி விருதுக்கு வால்பாறையை சேர்ந்த நாடக் கலைஞர் சாமி (எ) ஆர்.கந்தசாமி கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கலை இளமணி விருதுக்கு ரூ.4 ஆயிரம், கலை வளர்மணி விருதுக்கு ரூ.6 ஆயிரம், கலைச்சுடர்மணி விருதுக்கு ரூ.10 ஆயிரம், கலைநன்மணி விருதுக்கு ரூ.15 ஆயிரம், கலை முதுமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் பரிசுதொகைக்கான காசோலைகளும் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் ஹேமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க