• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கறுப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவடியுடன் ஆட்டம் போட்டு ஆர்ப்பாட்டம்

July 24, 2020 தண்டோரா குழு

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் பா.ஜ.க.,வினர் காவடி எடுத்து ஆட்டம் போட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ., மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டதில் அக்கட்சியினர் காவடி ஏந்தி, முருக கடவுள் பாடலை பாடி, மேலதாளம் முழங்க ஆட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வேண்டும். தைப்பூசத் திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். திமுக இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.” என்றார்

மேலும் படிக்க