• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

July 20, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை கணபதி, வெள்ளக்கிணறு பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்கள் பதிவு செய்து பராமரிப்பது, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து ஆவாரம்பாளையம் பகுதியில் கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.மேலும்,பொதுமக்கள் குப்பைகளை சாலை மற்றும் சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத்தொட்டியில் கொட்டவேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகன சுந்தரி, செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க