• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம்: தமிழக அரசின் 5 பேர் கொண்ட குழு சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆய்வு!

December 28, 2018 தண்டோரா குழு

கர்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிகப்படவரின் இரத்தம் ஏற்றப்பட்டது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ள நிலையில், அப்பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சார்பாக 5 பேர் கொண்ட குழு, சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்பிணி பெண்னுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்ப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டது. அப்பெண்மணி சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரத்தசோகை இருப்பது தெரியவந்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இதற்கிடையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, ரத்ததானம் செய்த இளைஞர் கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும் ரத்ததானம் செய்வதற்கு முன்பு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. பின்னர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்ட உத்தரவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 14 ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற மறுத்துவக்குழுவினர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பதிகப்படவரின் இரத்த தானம் பெறப்பட்ட நாளில் பணியில் இருந்த இரத்த வங்கி மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்த வங்கி உழியர்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறையின் தொழில் நுட்பவியலாளர் கணேஷ்பாபு ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரத்தை பரிசோதிக்காமல் அந்த இரத்தை பிறருக்கு செலுத்த கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் இருந்தும் அதை சரியாக பின்பற்றாமல் இருபது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாதது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த விசாரணையை தொடர்ந்து மருத்துவ வல்லுனர்கள் இரத்த வங்கியிலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க