May 15, 2018 தண்டோரா குழு
224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் அரசு அமைக்க முடிவுசெய்துள்ளது.
சோனியா காந்தி வழங்கிய ஆதரவை – தேவகவுடா ஏற்றுக் கொண்டதால் இன்று மாலை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
இதையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள குழு கர்நாடக ஆளுநரை சந்திக்கிறது.