• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமத்தம்பட்டி காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார்

November 11, 2017 தண்டோரா குழு

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு போராடிய சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6 ம் தேதி போராட்டம் நடத்தினர்.

கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய 3 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 6வது நாளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனயடுத்து சமூக ஆர்வலர்கள் மூன்று பேரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். அந்த புகாரில் காவல்துறை அமைதி வழியில் போராடிய தங்களை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறந்த ஐந்துபேரின் குடும்பத்திற்கு நாகை அரசு பேருந்து பணிமனையில் இறந்தவர்களைப்போல நஷ்ட ஈடு வழங்கக்கோரியும், தமிழக அரசு கட்டிய கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மேலும் உயிர்ப்பலி நடக்காமல் இருக்க வலியுறுத்தினர்.

மேலும் படிக்க