• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணை கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு !

March 9, 2018 தண்டோரா குழு

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கருணை கொலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீள முடியாத நோயால் தீராத வேதனையில் வாடுபவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம். செயலற்ற நிலையில் இருப்பவர்களையும் கருணைக் கொலை செய்யலாம்.  மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு, எனவேஇந்த உரிமையை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், கருணைக் கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயிர்பிழைக்க வழியில்லாத நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அகற்றி  உயிரிழக்க வைக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க