• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருங்கற்களை ஏற்றி சென்ற லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

December 19, 2020 தண்டோரா குழு

கோவையில் இருந்து கருங்கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மாங்கரையை அடுத்து சென்று கொண்டிருக்கும் போது எதிர் புறமாக ஒரு கார் வந்துள்ளது. காரின் மீது மோதாமல் இருக்க லாரின் ஓட்டுனர் லாரியை சாலையின் ஓரத்தில் செலுத்தியுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரியின் ஓட்டுநர் தப்பிய நிலையில் லாரி பள்ளத்தில் சிக்குண்டது. அதனை தொடர்ந்து கொக்கிலின் இயந்திரம் வரவழைக்கபட்டு லாரி பள்ளத்தில் இருந்து எடுக்கபட்டது. இதனால் மாங்கரை-ஆனைக்கட்டி செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கபட்டது.மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் சாலையின் ஓரத்தில் தடுப்புகள் ஆங்காங்கே மட்டும் இருப்பதால் தடுப்புகளை மாங்கரையில் இருந்து ஆனைக்கட்டி வரை போட வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க