November 19, 2019 தண்டோரா குழு
கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என கூறியுள்ளார்.
முன்னதாக நானும்,ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும் ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டிவேன் என ரஜினி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.