• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் – கமல் டுவீட்

November 30, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என நடிகர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை மீண்டும் பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு ஒகி என பெயரிடப்பட்டுள்ளது.இதையடுத்து தென் தமிழகமான குமரி மாவட்டத்தில் கனமழையும், புயல் காற்றும் வீசி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில்,கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு கமல் அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.

மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்கு உள்ளாகி தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க