• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனிஷ்க் தங்க நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு

March 22, 2018 தண்டோரா குழு

கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது போலி கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது 14 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் வீடு, மதுராந்தகம் அருகே உள்ள நகை தயாரிப்பு கூடங்களில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க