• Download mobile app
27 Jul 2025, SundayEdition - 3455
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம்

February 24, 2023 தண்டாரா குழு

கனிமவள கொள்ளையை தடுக்க கோரி தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறி கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபடுவதாகவும் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் குடிநீர் ஆதாரங்கள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனம் ஆவது மட்டுமின்றி நில அதிர்வுகளும் மாவட்டத்தில் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாக கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தமிழ்நாடு கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்தப் போவதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க