• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர் – கமல் வேதனை

September 1, 2017 தண்டோரா குழு

கனவோடு வந்த மாணவி அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர் என நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வரை சந்தித்தப்பின் சென்னை திரும்பும் வழியில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது போன்ற துயரம் இனி நிகழக்கூடாது.அவரது மரணத்தால் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் சாதி, கட்சி, மதம், மாநிலம் கடந்து போராட வேண்டும்.

அனிதா என்னுடைய மகள், என்னுடைய மகளுக்காக நான் குரல் கொடுப்பேன். கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். தமிழகத்தின் அரசியல் நிலவரம் வேடிக்கையாக உள்ளது எந்த பக்கமும் சாயமாட்டேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க