• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் -மதுரை காவல் ஆணையர்

November 3, 2017 தண்டோரா குழு

வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருபவர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள வட்டி விகிதத்தை விட அதிகப்படியான வட்டித் தொகை பெறுவதை தமிழ்நாடு கந்து வட்டி தடுப்புச் சட்டம் 2003 முற்றிலும் தடை செய்கிறது.மேலும் தமிழ்நாடு கடன் கொடுப்போருக்கான சட்டத்தின் படி சொத்து அடமானத்துடன் கூடிய கடனுக்கு ஆண்டுக்கு 9 சதவீதத்துக்கும் மிகாமலும்,சொத்து அடமானம் இல்லாத கடனுக்கு 12 சதவீதத்துக்கும் மிகாமலும் மட்டுமே வட்டித்தொகையாக வசூல் செய்ய வேண்டும் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.எனவே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர்கள் மேற்படி சதவீதத்தை விட கடன் பெற்றவர்களை அதிகப்படியான வட்டிகேட்டு துன்பறுத்தினலோ,மிரட்டினலோ அவர்களின் உயிர் மற்றும் உடமைக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

கடன் பெற்றவர்கள் கந்துவட்டி கொடுமையால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் 02-11-2017 மற்றும்
03-11-2017 ஆகிய இரு தினங்களில் மதுரை அழகர் கோவில் சாலையில் இருக்கும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்.இந்த புகார் மனுக்களின் மீது அடுத்த 10 தினங்களில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க