• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“கந்துவட்டிக்காரன்: மனித உணர்வுகளையும்மனித உயிர்களையும் உறியும் ஒரு அட்டைப்பூச்சி” – இயக்குநர் சுசீந்திரன்

October 24, 2017 தண்டோரா குழு

கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்டச் சேர்ந்த இசக்கிமுத்து, தன் குடும்பத்துடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இதில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த நிலையில் இசக்கிமுத்து உயிருக்கு போராடி வருகிறார்.

இச்சம்பவம், பார்ப்போரை மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கந்துவட்டி கொடுமைக்கு எதிராக இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கந்துவட்டி ஒரு பாவச்செயல், கந்து வட்டி ஒரு பெருங்குற்றம், கந்து வட்டி ஒரு மனித நேயமற்ற செயல், கந்து வட்டி கொலைக்கு நிகரான செயல். கந்து வட்டிக்காரன் மனித உணர்வுகளையும், மனித உயிர்களையும் உறியும் அட்டைப்பூச்சி இவனைவிட மோசமானவன் அயோக்கியன் யார் என்றால் இவர்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளும் பதிவியில் இருப்பவர்களும் தான் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க