• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கத்தார் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழி

August 16, 2017 தண்டோரா குழு

கத்தார் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழி ஒன்றை கத்தார் அரசு அறிமுகம் செய்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டியது. கத்தார் நாடு, அந்த குற்றசாட்டுகளை மறுத்தது. இதையடுத்து, கத்தார் நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. கத்தார் நாட்டிற்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையே சாலை, கப்பல், விமானம் ஆகிய சேவைகள் முடக்கப்பட்டன. மேலும் பொருளாதாரமும் குறைந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டின் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழியை கத்தார் அரசு அறிமுகம் செய்துள்ளது.

“கத்தார் நாட்டிலிருந்து கராச்சி செல்ல ஆறு நாட்கள் ஆகும். அதே போல் கராச்சியிலிருந்து கத்தார் வர எட்டு நாட்கள் ஆகும். இதன் மூலம் இரண்டு நாடுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை விரைவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வாடிக்கையாளர்கள், இறக்குமதி, ஏற்றுமதி செய்பவர்கள், இந்த புதிய வழியின் மூலம் உலகின் பல முக்கிய துறைமுகங்களுக்கு செல்ல முடியும் என்று கத்தார் துறைமுக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க