• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு – போலீஸ் விசாரணை

July 26, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே பட்டப்பகலில் சாலையில் நிறுத்தி வைத்த இரு சக்கர வாகனத்தை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சி வைரல் ஆகி வருகிறது.

கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர் (48). நேற்று சுபேரின் தந்தை இரு சக்கர வாகனத்தில் குறிச்சி பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகை கடை வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். பின் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து மளிகை கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது பேக் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபேர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

மேலும் படிக்க