• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு – போலீஸ் விசாரணை

July 26, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே பட்டப்பகலில் சாலையில் நிறுத்தி வைத்த இரு சக்கர வாகனத்தை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சி வைரல் ஆகி வருகிறது.

கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர் (48). நேற்று சுபேரின் தந்தை இரு சக்கர வாகனத்தில் குறிச்சி பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகை கடை வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். பின் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து மளிகை கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது பேக் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபேர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

மேலும் படிக்க