• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்ணாடியை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காணும் சீன போலீஸ்

February 8, 2018 தண்டோரா குழு

கண்ணாடியை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை சீன போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

சீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கண்ணாடியில்
கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது. இதன் மூலம் போலீசார் அந்த உபகரணத்தில் ஏற்கனெவே சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது முகவரி என்ன? தற்போது அவர் தங்கி இருக்கும் இடம், சமீபத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல், பயன்படுத்திய இன்டர் நெட் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த புதிய கண்ணாடியை பயன்படுத்தி இதுவரையில் சந்தேகத்திற்குரிய ஏழு பேரையும், தவறான அடையாள அட்டை உபயோகப்படுத்திய 26 பேரையும் இந்தக் கண்ணாடியின் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க