• Download mobile app
02 Dec 2025, TuesdayEdition - 3583
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணினிகளை ரான்சம் வைரஸ் தாக்காமல் இருக்க புனித நீர் தெளிப்பு

May 19, 2017 தண்டோரா குழு

ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கணினிகளை ரான்சம் வைரஸ் தாக்காமல் இருக்க புனித நீர் தெளிக்கப்பட்டது.

சமீப காலமாக ரான்சம் வைரஸ் சுமார் 15௦ நாடுகளிலுள்ள சுமார் 2.௦௦,௦௦௦ கணினிகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை முடக்கிவிடும். அந்த தகவல்களை மீண்டும் பெற பணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி பணம் செலுத்தவில்லை என்றால் அந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்படும் அபாயமும் உண்டு.

15௦ நாடுகளிலிருக்கும் மருத்துவமனைகள், பள்ளி நிறுவனங்கள், ப்ளூ சிப் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள், சினிமா அரங்கம் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் ரஷ்ய நாடு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிருந்து தப்பிக்க, ரஷ்ய நாட்டின் கிறிஸ்துவ சபை பாதிரியார் கிரில் என்பவரை அழைத்து கணினிகள் மேல் புனித நீரை(holy water) தெளித்து உள்ளனர்.

கணினிகளை தாக்கும் வைரஸ்களிடமிருந்து,புனித நீர் கொண்டு காப்பாற்றுவதற்கு பதிலாக, இன்னொரு முறையை தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது என்னவென்றால், “கணினி வைரஸ் தாக்காமல் இருக்க மென்பொருள்களை மேம்படுத்த வேண்டும். வைரஸ் தடுப்பு மென்பொருள்களை வாங்க வேண்டும். சந்தேகப்படும் படியாக இருக்கும் இ மெயில் அல்லது பாப் அப் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்” என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க