• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற 15 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா

March 20, 2018 தண்டோரா குழு

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார்.

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டிட்டுந்தார்.

இதையடுத்து,அரசியல்சந்திப்புகள்கூடாது,தஞ்சாவூரைவிட்டுவெளியேறக்கூடாது,செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளக் கூடாது போன்ற  நிபந்தனைகளோடு சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்கிறார்.

மேலும் படிக்க