• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கணவன் – மனைவி சண்டைக்கு குறுக்கே வந்த மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்

April 27, 2019 தண்டோரா குழு

மதுரை மாவட்டம், சமயநல்லூரில், குடும்ப தகராறில், மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துக்குமாரும், கவிதாவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சில பிரச்சனை வருவது வழக்கும். அடிக்கடி சண்டை போட்டு வந்த இவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று கவிதா வீட்டிற்கு சென்ற முத்துக்குமார், அங்கு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் தான் முதலில் சண்டை ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் சண்டை ரொம்ப முற்றி போகவும், பிரச்சனையை தடுக்க கவிதாவின் தாயார் லட்சுமி முன்வந்துள்ளார்.இதனால்,ஆத்திரத்தில் இருந்த முத்துக்குமார், குறுக்கே வந்த லட்சுமியின் காதை, இழுத்து பிடித்து கடித்து துப்பிவிட்டார். இதில் லட்சுமி வலியால் அலறி துடித்தார். ரத்தம் பொலபொலவென கொட்ட ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து லட்சுமியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாயின் காதை கடித்து துப்பியதை பார்த்த கவிதா, முத்துக்குமார் மீது போலீசில் புகார் தந்தார். புகாரின் பேரில் போலீசார் முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க