May 4, 2021 தண்டோரா குழு
சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி
உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.
தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்துபவர் டிராபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.
பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான இவர் தொடர்ந்த வழக்கு காரணமாகே தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில்முதுமையின் காரணமாக உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர் இன்று மாலையில் காலமானார்.