• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டிடங்கள் சரி செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை

September 4, 2020 தண்டோரா குழு

கோவையில் காலி இடத்தில் நடைபெறும் கட்டிடங்களை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி விரைந்து முடிக்க தினசரி காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் பேருந்து நிலையங்களில் கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், பொது முடகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததையடுத்து,பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அந்தந்த மார்க்கெட் பகுதிகளுக்கு பழைய படி மாற்றி அமைக்கப்பட்டன.

இந்நிலையில், உக்கடம் மார்க்கெட் எதிரே உள்ள காலி மைதானத்தில் உக்கடம் ராமர்கோவில் வீதி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.கடைகள் அமைத்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் சரி செய்யும் பணிகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறும் வியாபாரிகள்,பணிகளை விரைந்து முடித்தால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நெருக்கடியிலிருந்து மீழ உதவியாக இருக்கும் என்கின்றனர்.சுமார் 1000 குடும்பங்கள் அந்த இடத்தில் நடைபெறும் வியாபாரத்தை நம்பி உள்ளனர்.

மேலும் படிக்க