• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா ? கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

November 7, 2017 தண்டோரா குழு

அரசியல் கட்சி தொடங்க மக்களிடம் பணம் கேட்பதா? என நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை முலக்கொத்தளத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம். ஆனால், அதை முடிவு செய்யும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் கட்சி தொடங்க தொண்டர்களிடம் கொடை கேட்டவர் கமலஹாசன் என குறிப்பிட்டார்.

மேலும், எந்த அடிப்படையில் ரூ.30 கோடி தொண்டர்களிடம் இருந்து வசூலிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தனக்கு புரியவில்லை என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க