• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டில் 129 எம்.எல்.ஏக்கள்

February 8, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்த 129 சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் தனியாக வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் சென்னையில் இரு வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தும் வகையில் செவ்வாய்க்கிழமை இரவு பேட்டியளித்தார். அதையடுத்து சசிகலா தலைமையில் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 130 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால், செய்தியாளர்கள் தரப்பில் 129 எம்.எல்.ஏ-க்கள் தான் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.

இதனிடையே, ஓ. பன்னீர்செல்வம், “எனக்கு எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவும் கிடைக்கும். அதற்கான சூழ்நிலைகள் மாறும்” என்று செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதனால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, “எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையைவிட்டுச் செல்லக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.

எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்று கருதுவதால், வீட்டுச் சிறை வைப்பதுபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் 60 அறைகள் எடுத்து, அறைக்கு இரண்டு பேர் வீதம் எம்.எல்.ஏ-கள் தங்க வைக்கபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க