• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

September 30, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், கடந்த 4 மாதத்தில் 41 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் இந்த மழையின் அளவு இயல்பை விட 29% அதிகம் எனவும் தெரிவித்தார். அதைபோல் கடந்த 22 வருடங்களில் இல்லாத அளவுக்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.

இயல்பை விட கோவையில் 169%, சென்னையில் 2% அதிக மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. கன்னியாகுமரி, காரைக்காலில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க