• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா இளைஞர் கைது

April 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் பிரிவுக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனபதன்(28) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் தனபதனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில்,

ஒடிசா மாநில இளைஞர் இங்கு முதலில் கூலி வேலைக்கு தான் வந்துள்ளார். தனியார் தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கூலி வேலையில் அவருக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை என கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்,” என்றனர்.

மேலும் படிக்க