January 14, 2019
தண்டோரா குழு
கஜா புயல் பாதிப்பு மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகை மற்றும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ விலை நிலவரம் குறித்து கீழே பார்ப்போம்.
ஜாதி மல்லி ஒரு கிலோ ரூ.1500, (மற்ற நாட்களில் கிலோ ரூ.600க்கு விற்பனையாகும்) காட்டு மல்லி (காக்கரட்டான்) ஒரு கிலோ ரூ.800 (மற்ற நாட்களில் கிலோ ரூ300) செவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.150 (மற்ற நாட்களில் கிலோ ரூ.80) ரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.260 (மற்ற நாட்களில் கிலோ ரூ.120) கனகாம்பரம் பூ ரூ.1200 (மற்ற நாட்களில் கிலோ ரூ.600) அரளிப்பூ ஒரு கிலோ ரூ.300 (மற்ற நாட்களில் கிலோ ரூ.150) விச்சு பூ ஒரு கிலோ ரூ.120 (மற்ற நாட்களில் கிலோ ரூ.60)
கோழி கொண்டை பூ கிலோ ரூ. 80 (மற்ற நாட்களில் கிலோ ரூ.40)
மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.20
கடந்த மூன்று நாட்களாக இதே விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலையுயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.