• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது

July 25, 2017 தண்டோரா குழு

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மதுரை ஆணையூரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பான கக்கூஸ் ஆவணப் படத்தை இயக்கியவர் திவ்யபாரதி.இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இதனை பல்வேறு இடங்களில் திரையிட போலீசார் அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திவ்யபாரதி 2009ல் மாணவராக இருந்த போது நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதால் தற்போது கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் திவ்யா மதுரை ஆனையுரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட திவ்யபாரதியை ஆகஸ்ட் 8வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவி வளர்மதி, மாணவர் குபேரன் வரிசையில் தற்போது திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க