April 4, 2019 தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தும் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்யப்போகும் தொகுதியில் அவர்களுக்காக சிறப்பு வாகனங்களை முன்கூட்டியே கொண்டு செல்வது வழக்கம்.
இதற்கிடையில், நீலகிரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்றிருந்தார். இதற்காக சென்னையிலிருந்து, ஊட்டிக்கு நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு, இன்று காலை கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், ஊட்டியிலிருந்து, கூடலூர் செல்லும் பாதை மிகவும் சரிவான என்பதால் ஊட்டி- கூடலூர் நடுவே, நடுவட்டம் என்ற பகுதியில் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது, தலைகுப்புற கவிழ்ந்தது.வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடன் ஒரு உதவியாளர் இருந்துள்ளார். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய வேண்டிய வாகனம் கவிந்து விபத்திற்குள்ளானதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.