• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா கடிதம் ஏற்பு – வித்தியாசாகர் ராவ்

February 6, 2017 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பிய ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள குறிப்பில், “ஓ. பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிப்ரவரி 5-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவுக்கு அனுப்பிய கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்கும் வரை, அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சர் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்துவிட்டார். “எனது சொந்த காரணங்களுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று ஆளுநருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் 21-வது முதலமைச்சராக வி.கே. சசிகலா பதவியேற்கப் போகிறார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க