• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – ஜெ. தீபா

February 8, 2017 தண்டோரா குழு

ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திடீரென்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

தன்னை வற்புறுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், தனி ஆளாகப் போராடி கட்சியைக் காப்பாற்றத் தயாராக இருப்பதாகவும் பன்னீர்செல்வம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகள் அதிமுகவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைப் புதன்கிழமை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபாவுடன் இணைந்து பணியாற்றவும் தயார் என்றார். அத்துடன் தீபாவுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, தி. நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, “தற்போதைய சூழலில் நான் ஏதும் கூற முடியாது. எனது நிலையை விரைவில் அறிவிப்பேன்.

முதல்வரைச் சந்திப்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் தெரிவிப்பேன். என்னைப் பற்றிய யூகங்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

மேலும் படிக்க