• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் – முகுல் ரோத்தகி

February 15, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

“தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் அழைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிகாரம் உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் இரண்டு அணிகளையும் அழைத்து சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். அதில் அதிக பெரும்பான்மை வைத்துள்ள நபருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும். அதன் பின்னர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும். யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று ஆளுநர் நினைக்கிறாரோ அவரை மட்டும் அழைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது”

இவ்வாறு முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

மேலும் படிக்க