• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ் உட்பட 12 பேரை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக வழக்கு

September 25, 2017 தண்டோரா குழு

ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் அவர் வெற்றியும் பெற்றார். எனினும் அப்போது பிரிந்து இருந்த ஓபிஎஸ் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் வாக்களித்திருந்தனர். எனவே கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை தேவை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக வரும் புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மேலும் படிக்க