• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

October 4, 2017 தண்டோரா குழு

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.இதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 12 எம்.எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது 12 எம்.எல்.ஏ.க்களும் பிப்ரவரியில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் என்றும் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால் எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்கவும் திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான வக்கீல் அமரேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இது குறித்து சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி அக்.12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க